இந்திய கபடி அணி கபடி மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் கென்யாவை வீழ்த்தியது!

Default Image
துபாயில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர்  நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் மூன்று லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, கென்யாவை எதிர்கொண்டது.
இந்திய வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 29-5 என முன்னிலை வகித்தது.
 இந்திய அணி  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், கென்யா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்