ராஜஸ்தான் முதலமைச்சர் மாநிலத்தை கூட்டுக்கொள்ளை!பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கன்ஷியாம் திவாரி பா.ஜ.கவில் இருந்து விலகல்!
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கன்ஷியாம் திவாரி, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மாநிலத்தை கொள்ளை அடிப்பதாக குற்றஞ்சாட்டி நிலையில் பா.ஜ.கவில் இருந்து விலகியுள்ளார்.
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவுடன்,5-வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள கன்ஷியாம் திவாரிக்கு விவசாயிகள் பிரச்சினை, இட ஒதுக்கீடு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியில் இருந்து விலகியுள்ள கன்ஷியாம் திவாரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அவர் மீது பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.