ரூ.15 ஆயிரத்திற்கு 6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை!

Default Image

காவேரி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஅள்ளி அருகே உள்ள பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். கூலித் தொழிலாளியாக இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 6 வயதான தனது கடைசி மகனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மன்னன் நகரை அடுத்துள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு 4 ஆண்டுகளுக்கு காவேரி குத்தகைக்கு கொடுத்துள்ளார். அந்த சிறுவனை வடிவேல் ஆடு மேய்க்க பயன்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாவுக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், 15 ஆயிரம் ரூபாய்க்கு தந்தையே குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள், தர்மபுரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றனர். சிறுவனை குத்தகைக்கு கொடுத்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்