தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை!

Default Image

கடலோர பாதுகாப்புப் படையினர் ,கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டுள்ளனர்.

குமரி கடலோரப் பகுதியான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் சஜாக் ஆபரேஷன் (SAJAG) என்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலிஸாரும், தமிழக கடலோர பாதுகாப்பு படையும் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் குமரி வரையிலான கடலோரப் பகுதியிலும் சஜாக் ஆபரேஷன் எனப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ஒத்திகை மாலை வரை நடைபெறுகிறது. அதிவிரைவு படகுகளில் நவீன தொலை நோக்கிகள் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிப்பது உள்ளிட்ட ஒத்திகைகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்