சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

Default Image

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

பேரூர் எல்ஐசி காலனியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர், வாகனம் மோதியதில் படுகாயமுற்று கிடந்தார்.

அவரைக் கண்ட வேலுமணி, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்