பிக்பாஸ் 2 : ‘பரணி’யை போலவே ஓரம்கட்டப்படும் நடிகர் ‘சென்ட்ராயன்’..!

Default Image

ஒரு வருட காத்திருப்புக்கு பின் துவங்கி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் சின்னத்திரை ரசிகர்கள். அதற்கு இந்நிகழ்ச்சி கோலாகலாமாக ஆடல் பாடல் என துவங்கினாலும், கூடிய சீக்கிரத்தில் ஏற்பட இருக்கும் முட்டல் மோதல்களால் பிரபலங்களின் உண்மை குணத்தை தெரிந்துகொள்ளலாம் என்பதும் ஒரு காரணம்.

என்றாலும் வழக்கம் போல ஒரு சில வாரங்கள் பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் சுமூகமாகவே செல்லும் என ரசிகர்கள் எதிர்பாத்திருந்த வேளையில், முதல் நாளிலேயே வெடித்து விட்டது பூகம்பம்.

Image result for பிக்பாஸ் 2 : 'பரணி'யை போலவே ஓரம்கட்டப்படும் நடிகர் 'சென்ட்ராயன்'..!சமீபத்தில் வெளிவந்துள்ள அந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில், டாஸ்க் எனும் பெயரில் நான்கு என்வெலப்களை பிரபலங்களின் படுக்கைகளில் ஒளித்துவைத்து, கண்டு பிடிக்க சொல்கிறார் பிக்பாஸ்.

Related imageஇதனால் ஆளாளுக்கு அடித்து பிடித்து அந்த என்வெலப்களை தேட, திடீரென பெண்களின் துணியை ஆண்கள் தொடாதீர்கள் என வெளிப்படையாகவே பேசி விடுகிறார் மும்தாஜ். அவர் பேசியதில் நியாயம் இருந்தாலும், பளீச் என்று அவர் அப்படி கூறியது, நடிகர் செண்ட்ராயனுக்கு கோபத்தை தூண்டவே கேமராவை பார்த்து ஆவேசமாக முறையிடுகிறார். இதனால் நடிகை மும்தாஜும் அவரது செய்கைகள் குறித்து புகார் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.

Image result for பிக்பாஸ்  :சென்ட்ராயன்இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட டாஸ்க்கிலும், செண்ட்ராயனின் உடைகளை கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார் மும்தாஜ். இத்தகையை செய்கைகள் மும்தாஜுக்கு, செண்ட்ராயனின் மேல் இருக்கும் வெறுப்பை காட்டுவதாகவே உள்ளது.

Image result for பிக்பாஸ்  :சென்ட்ராயன்இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, முதல் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி நமீதா ஆகியோரால் பரணி ஓரம்கட்டப்பட்டு சுவர் ஏறி குதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது.

செண்ட்ராயன் இந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்