அரியானா அரசின் மனிதநேயம்..!

Default Image
விளையாட்டு வீரர்கள் – வீராங்கணைகளை ஊக்குவிப்பதிலும், பேரிடர் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படுவர்கள் மற்றும் எல்லைப்பகுதியில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தாராளமாக நிதி உதவி அளிப்பதிலும் சாதனை படைத்துவரும் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரியானா மாநில அரசு இன்று மேலும் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும். மேலும், மாநில அரசின் சார்பில் நியாயவிலை கடைகளுக்கான ஒதுக்கீட்டில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரியானா மாநில சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி கிரிஷன் குமார் பேடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவிகளை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் பட்டியலின் அட்டவணை இரண்டில் உள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்