தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு !சென்னை வானிலை ஆய்வு மையம்

Default Image

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் வலுக்குறைந்து காணப்படுவதால், தமிழகத்தில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்