போலீஸ்காரரை 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற அம்ரித் ..!

Default Image

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏஎஸ்ஐ) பணிபுரிபவர் அம்ரித் பால் பைலாலா. இவர் நிஷாத்புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த காரை அம்ரித் மறித்தார். ஆனால் நிறுத்துவதற்குப் பதிலாக அந்தக் கார் அம்ரித் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த அம்ரித் மீது, டிரைவர் காரை ஏற்றிக் கொல்ல பார்த்துள்ளார். ஆனால் காரின் அடிப்பகுதியில் சிக்கிய அம்ரித்தை அந்தக் கார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது. பின்னர் காரின் அடிப்பகுதியில் இருந்து அம்ரித் தரையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அம்ரித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. – ஐஏஎன்எஸ்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்