விருதுநகரில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை!

Default Image

24 வயது இளைஞர் ஒருவர் விருதுநகரில்  மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரின் மகன் மைதீன், அடிதடி வழக்கு ஒன்றில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், விருதுநகர் முத்துராமன் பட்டியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்த மைதீன், புகைப்பிடிப்பதற்காக மறைவான இடத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அவரைப் பின் தொடர்ந்த மர்ம கும்பல், மைதீனை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. உடலில் 14 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில், மைதீன், விருதுநகர் அரசு மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மைதீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்