ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு! அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவு!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து உதவி ஆட்சியர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் கூட உள்ளே பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன சேமிப்பகம் ஒன்றில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து ஆய்வு செய்ய உதவி ஆட்சியர் பிரசாத் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, வருவய்த்துறை, காவல்துறையினர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

கசிவு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதனிடையே வல்லுநர் குழுவானது ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர்.

தற்போது  ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்