நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிறைதான் மிகவும் சரியான இடம்!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அமைச்சர் ஜெயக்குமார் ,வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிறைதான் சரியான இடம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் கலந்து கொள்வேன் என்றும், 8 பேரையாவது கொன்னுட்டு தான் சிறைக்கு செல்வேன் என்றும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து அவரை இன்று சேலம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதில் எந்த வன்முறையும் இல்லை, விமர்சனம் செய்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்