சென்னையில் மாணவர்களுக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் படுகாயம்!

Default Image

சட்ட மாணவர்களுக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே சென்னையில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவிதா சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் 14 பேர் இரண்டு கார்களில் கோயம்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆட்டோ ஒன்றின் மீது உரசியதால் ஆட்டோவில் பயணித்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து மாணவர்கள் துரத்தியதை அடுத்து முதலில் தப்பிச் சென்ற ரவுடிகள், பின்னர்  கோடம்பாக்கம் பெட்ரோல் பங்க் எதிரே வந்து வம்புக்கு இழுத்து பட்டாகத்தியைக் கொண்டு வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவுடி கும்பலை தேடும் போலீசார் பிற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்