தமிழ்நாடு தகவல் ஆணையம் பள்ளிகளின் நிர்வாகக் குழுவினர், ஊழியர்களின் குற்றப் பின்னணி விவரங்களை இணையத்தில் வெளியிட உத்தரவு!
தமிழ்நாடு தகவல் ஆணையம் ,தமிழக பள்ளிகள் தங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் குற்றப் பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்ட வழக்கு ஒன்றை விசாரித்த ஆணையர் முத்துராஜ், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மேற்கோள் காட்டினார். குழந்தைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் குறித்து பெற்றோர் தெரிந்துகொள்வது அவசியம் என்பதால், பள்ளிகள் தங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஊழியர்களின் குற்றப்பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டார்.
மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநருக்கும், உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 16-க்குள் அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் மற்றும் குற்ற ஆவணக் காப்பக பொது தகவல் அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.