வருமானத்தை மறைத்த திரிஷா!உயர் நீதிமன்றம் அதிரடி

Default Image

உயர் நீதிமன்றம் ,வருமானத்தை மறைத்ததாக நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

2010-11ஆம் நிதியாண்டில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாக கூறி, திரிஷாவுக்கு வருமான வரித்துறை ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 2010-11ஆம் நிதியாண்டில் திரைப்படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை, 2012-13ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமான வரி கணக்கில் காட்டியதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை ஆணையரிடம் திரிஷா தரப்பில் முறையிடப்பட்டது.

இதை ஏற்று, திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார். வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து, வருமானவரித்துறை முதன்மை ஆணையர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தது சரிதான் என தீர்ப்பளித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்