18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு:தினகரனுக்கு சரியான சம்மட்டி அடி!திவாகரன்
மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், அப்போது அவர் கூறியதாவது:-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. இனி 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.
இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக வேண்டும் என்பது தான் தினகரனின் விருப்பம் மற்றும் முயற்சி. அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது.
எனவே இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.