கடலோரப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Default Image

சென்னை வானிலை ஆய்வு மையம் ,தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும், அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 6மணிக்குத் தொடங்கி அடுத்த 24மணி நேரத்துக்குக் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையில் இருந்து மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்றுவீசும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும், கடலில் மூன்றரை முதல் 4.3மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 45நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலையிலேயே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்