பிரதமர் மோடி சட்டிஸ்கரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ..!
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நக்சலைட்டுகளின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு வளர்ச்சி ஒன்றே பதில் என்று தெரிவித்துள்ளர்.
பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக சட்டிஸ்கர் மாநிலத்திற்கு சென்றார். நயா ராய்புரில் அவர் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நயா ராய்புரைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பிஹாலிக்குப் புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு பிஹாலி ஸ்டீஸ் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து ஜெயந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய மோடி சட்டிஸ்கர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தொடர்புடைய பூமி என்றும் இதன் வளர்ச்சிக்காக தமது அரசு முழு அளவில் அர்ப்பணித்துள்ளது என்றும் தெரிவித்தார். நக்சலைட்டுகளின் வன்முறைக்கு வளர்ச்சிதான் சரியான பதிலடி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.