ஜம்மு-காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி சுட்டுக் கொலை!

Default Image

ஜம்மு-காஷ்மீரில்  ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர்  என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் சென்ற போது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.
இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்டு திரும்பினார். அப்போது அவரை  வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்
 அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.

இந்நிலையில்  ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்