காஷ்மீரில் மனித உரிமைகள் என ஐ.நா அறிக்கை – கடும் எதிர்ப்புடன் இந்தியா நிராகரிப்பு..!

Default Image
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபை வெளியிட்ட முதல் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.
ஆனால், ஐ.நா சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையின் மனித உரிமை மீறல் மீதான அறிக்கை வெளிப்படையான பாரபட்சம் மற்றும் தவறான கதையை உருவாக்கும் முயற்சி ஆகும்.
ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது. இதுபோன்ற அறிக்கைக்கான உள்நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம்?
ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப் பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பைக் கொண்டு திட்டமிடப்பட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்