MK Stalin : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!

Tamilnadu CM MK Stalin

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைதொகையாக வழங்கப்படும் எனும் திட்டமாகும். இந்த திட்டமானது எப்போது அமல்படுத்தப்படும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் துவங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதற்காக சரியான தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்கும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது . இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் இறுதியில் கொடுக்கப்பட்டு ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் மூலம் தகுதியான நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது சுமார் ஒரு கோடி பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் துவங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் நாளை இந்த திட்டம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் முக்கிய ஆலோசனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.

நாளை தலைமைச் செயலகத்தில் தமிழக உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத் தொகைக்கான செயல்பாடுகள் அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாளர் அகமது ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk