#BREAKING: சுதாரித்துக் கொண்ட சந்திரயான்-3 ரோவர்..! புதிய பாதையில் பயணம்..!

pragyaan rover

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் ஆனது புதிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி, “ஆகஸ்ட் 27, 2023 அன்று, ரோவர் ஆனது 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை அதன் இருப்பிடத்திலிருந்து 3 மீட்டருக்கு முன்னால் கண்டுள்ளது. இதனால் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக பாதையை மாற்றுவதற்கு ரோவருக்கு கட்டளையிடப்பட்டது. இப்போது பாதுகாப்பாக புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது.” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்