மதுரையில் ரயில் தீ விபத்து : தப்பிச்சென்ற 5 சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் விசாரணை!

madurai train accident

மதுரை ரயில் நிலையம் அருகே மற்றொரு ரயிலுடன் இணைக்க நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீரென நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டதில், 9 பேர் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயிலில் ஆன்மீக யாத்திரையாக 64 பேர் பயணித்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், ரயில் பயணித்த பயணிகள் எடுத்து வந்த சமையல் சிலிண்டர் வெடித்தது காரணமாக இரண்டு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதில் இருந்து  தப்பிச்சென்ற 5 தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் ரயில்வே காவல்துறை சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ரயிலில்  விபத்து ஏற்பட்டது தொடர்பாக 2-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் உள்ள பேட்டரிகளின் வெப்பநிலை, பராமரிப்பு குறித்து சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்