சந்திரயான்-3 மகத்தான வெற்றி..! இஸ்ரோ தலைவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்..!

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்தது.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் பிறகு லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து  ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது.

இந்நிலையில், சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், “நேற்று மாலை இஸ்ரோவின் மகத்தான சாதனையால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. இது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் மிகுந்த பெருமையும், உற்சாகமும் அளிக்கும் விஷயமாகும்.”

“இஸ்ரோவின் சிறப்பான திறன்கள் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க தலைவர்களைக் கொண்டுள்ளது மற்றும் கூட்டு முயற்சியின் ஆவி எப்போதும் அதை இயக்குகிறது. அறுபதுகளின் முற்பகுதியில் இருந்து தன்னம்பிக்கையின் மீது தொகுத்துக்கொண்டது அதன் பெரும் வெற்றிகளுக்கு பங்களித்தது.”

“ஒட்டு மொத்த இஸ்ரோ சகோதரத்துவத்திற்கும் எனது வாழ்த்துகள் மற்றும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் அதன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Congress
Congress

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk