சாதனை படைத்த இந்தியா..! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் நன்றி..!

Somanath

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தற்போது நிலவை சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலம், சற்று முன் (6.04 மணி) நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த  இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், “சந்திரயான்-3 பணியின் வெற்றிக்காக பின்னணியில் உள்ள தனது குழுவினருக்கு நன்றி” என்று கூறினார். சந்திரயான்-3 திட்டத்தை வெற்றியடைய செய்த வீர முத்துவேலுக்கு தனது பாராட்டை தெரிவித்த சோம்நாத், “சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம். சந்திரயான் 2 மூலம் இன்னும் தகவல் தொடர்பு இருக்கிறது. இந்த பணியில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்