மீண்டும் தமிழகத்தில் வெடிவிபத்து! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Pudukkottai

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி‌ கிராமத்திற்கு‌ அருகே செயல்பட்டு வந்த தனியார் வெடி தயாரிக்கும் பட்டறையில் தற்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் மொத்தமாக 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்