உத்தரபிரதேசத்தில் விபத்து..!

Default Image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேருந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி ((Mainpuri)) மாவட்டத்தின் தன்ஹரா ((Danhara)) என்ற இடத்தில் பேருந்து அதிவேகத்தில் சென்றதாகவும், அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் உடல்களையும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டுநர் மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்