என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – பிரபல நடிகருக்கு சவால் விட்ட நடிகை..!

என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – சவால் விட்ட நடிகை..!

தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருப்பதாகக் கூறி போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. திடீரென ஒருநாள் அவருடைய போராட்டம் அரை நிர்வாணப் போராட்டமாக மாற, விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

தெலுங்கு சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகளுடன் படுக்கையை பகிருந்து கொள்கிறார்கள் என அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். அதில், நடிகர் நானியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார். இவர் ராஜமௌலி இயக்கிய ‘ஈ’ படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக நடித்தவர்.

நடிகர் நானி ஒருத்தருக்கு பிறந்திருந்தால் என்னுடன் அவர் படுக்கையை பகிரவில்லை என சத்தியம் செய்ய வேண்டும் என தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

Image result for நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டிதெலுங்கு பிக்பாஸ்-2 வில் ஸ்ரீரெட்டி பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்தும் நானி, ஸ்ரீரெட்டி பங்கேற்றால் இந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டேன் எனக்கூறிவிட்டதால், ஸ்ரீரெட்டி கழட்டிவிடப்பட்டார் என செய்திகள் வெளியானது. மேலும், நானியை பற்றி வெளியே கூறிவிட்டதால் என்னுடைய அனைத்து சினிமா வாய்ப்புகளையும் அவர் தடுக்கிறார் என ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி வருகிறார். அதோடு, நானி தன்னுடன் பகிர்ந்துகொண்டார் என பகீரங்க புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில், ‘நீ ஒருத்தருக்கு பிறந்திருந்தால், உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால் நீ என்னுடன் படுக்கையை பகிரவில்லை என உன் குடும்பத்தார் மற்றும் கேரியர் மீது சத்தியம் சாய் பார்ப்போம்’ என நானிக்கு ஸ்ரீரெட்டி சவால் விட்டுள்ளார். இல்லையெனில் நான் சாபம் விட்டு விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தொடர்ந்து நானி கூறி வருகிறார்.அதோடு, அவர் மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நானியை பற்றிய ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகை ஆட்டம் காண செய்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment