மக்களை விரைவாக சந்திக்க இபிஎஸ் புதிய கார் வாங்கியுள்ளார்.! செல்லூர் ராஜு பேட்டி.!

Sellur raju

மக்களை விரைவாக சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இபிஎஸ் புதிய அகார் பற்றி பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வாங்கிய புதிய கார் பற்றி கேட்கையில், மக்களை விரைவாக சந்திக்க புதிய கார் வாங்கியுள்ளார் என்றார்.

மேலும், அதிமுகவின் வெற்றிப்பயணத்தை துவங்க, மக்கள் பணிகளை விரைவாக முடிக்க இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என கூறினார். அடுத்து மாமன்னன் படம் பற்றி கேட்டபோது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படம் பார்த்தபிறகு கூறுகிறேன் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.

பாஜவுடனான கூட்டணி பற்றி கேட்கையில், மக்களுக்கு எது நல்லதோ அதனை செயல்படுத்துவோம். பாஜக கூட்டணி பற்றி எங்கள் கட்சி பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிச்சாமி) முடிவெடுப்பர் அதனை நாங்க ஏற்றுக்கொள்வோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்