புதரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்களும் – காலி மதுபாட்டில்களும்..!

Default Image

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் செல்லும் வழியில், அமைந்துள்ள அனல்மின்நிலையம் அருகிலுள்ள புதரில், நூற்றுக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்களும், அதனுடன் 10 க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டில்களும் கிடந்தன.

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் சிலர், நேற்று இரவு இந்த பகுதியில் மது அருந்திவிட்டு, போதையில் தாங்கள் கொண்டுவந்திருந்த வீட்டுமனை பட்டாக்களை இங்கேயே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்டாக்கள் சிதறிக்கிடப்பதை அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த வட்டாட்சியர் அலுவலர்கள், பட்டாக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதரில் கிடந்த வீட்டுமனை பட்டாக்கள் அனைத்தும் திருவாடாணை தாலுகா திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டிய பட்டாக்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்