மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் வெளியீடு!

tasmac

சென்னை மண்டலத்தில் நாளை முதல் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி 500 மதுக்கடைகள் உடனே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில், தமிழகத்தில் 500 மதுபான சில்லறை கடைகள் நாளை முதல் மூடப்படுகிறது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

இதுபோன்று, மதுரை மண்டலத்தில் – 125, திருச்சி மண்டலத்தில் – 100 கோவை மண்டலத்தில் – 78, சேலம் மண்டலத்தில் – 59 என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதனடிப்படையில், இந்த 500 மதுக்கடைகள் நாளை முதல் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts