இன்னும் 3 மணிநேரத்திற்கு விடாது மழை… திட்டமிட்டபடி இன்று +2 தேர்வு உறுதி.!

Chennai rains

இன்னும் 3 மணிநேரத்திற்கு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்த வந்த வேளையில் , தற்போது வெப்பத்தை தணிக்க சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை என்றாலும், 12ஆம் வகுப்பு துணைதேர்வானது திட்டமிட்டபடி, இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 3 மணிநேரத்திக்கு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மீனம்பாக்கம் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்