#Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம்… உயர்நீதிமன்றம் அனுமதி.!

KaveriHospital

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி.

அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கொண்டு பைபாஸ் சர்ஜெரிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை மனுவும் அளித்திருந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கையை ஏற்று, சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என அனுமதி அளித்துள்ளனர்.

மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று கருதிய நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு வழங்கிய நிலையில், நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி நீடிக்கவேண்டும் எனவும், அமலாக்கத்துறை மருத்துவக்குழுவும் சிகிச்சியை ஆராயலாம் என்றும் உத்தரவு அளித்துள்ளனர்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதிலளிக்கவும், வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts