பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் – சிறுமி அளித்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் இல்லை.! டெல்லி காவல்துறை அறிக்கை.!

bhushan sharan singh

மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில்,  மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் தான் பிரிட்ஜ் பூஷன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முதல் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது பிரிஜ் பூஷண் மீது சிறுமி அளித்த பாலியல் புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தற்போது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மேலும், சிறுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது பதியப்பட்ட FIR ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும்,  நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்