70,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி.!

PMModi

ரோஸ்கர் மேளா மூலம்  70,000 பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி.

ரோஸ்கர் மேளா மூலம் மத்திய அரசு பணியில் புதிதாக சேரவுள்ள 70,000 பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் பணி நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நிகழ்ச்சியில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத்துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படுகின்றன.

ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் .பிரதமர் மோடி, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி, 10 லட்சம் அரசு வேலைகள் வழங்குவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ‘ரோஸ்கர் மேளா’வின் முதல் கட்டத்தைத் தொடங்கினார்.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசில் சேருவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்