அப்படி நடக்கவே இல்லை.. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்.!

Minister Mano thangaraj

சென்னை, அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

நேற்று சென்னை அம்பத்தூர் ஆவின் பால் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவம் குறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் பால் தொழிற்சாலையில் எந்தவித குழந்தை தொழிலாளர்களும் பணியமர்த்தப்படவில்லை எனவும், அங்கு நடந்தது 18வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களுக்கும் அங்கு உள்ள ஒப்பந்தரார்களுக்கும் இடையே நடந்த சம்பள பிரச்சனை என்றும் செய்திகள் தவறாக வெளிவந்துள்ளன என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்