உலக சாதனைக்கு தயாராகும் மைசூர்.! பிரம்மாண்ட யோகா பயிற்சி..!

Default Image

கர்நாடக மாநிலம், மைசூருவில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. ஒரே இடத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இந்நிலையில், சுகாதர ஆர்வலர்கள், நமது பண்பாட்டு கலையான யோகவை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு மைசூருவில் மீண்டும் ஒரு  பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உலக யோகா தினம் கொண்டாடப்படும் தினமான ஜூன் 21-ம் தேதி மைசூரு மாவட்டம் சாமுண்டி பகுதியில் உள்ள மைசூரு ரேஸ் கிளப்பில் இந்த நிகழ்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், போதிய நிதி இல்லாத காரணத்தினால் கின்னஸ் சாதனை அலுவலகத்துக்கு இந்நிகழ்ச்சியை பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டை போல இம்முறை சாதனையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்