#BREAKING: அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு.! இன்று ஆவணங்கள் ஒப்படைப்பு…

OPS and EPS

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில், இபிஎஸ் தரப்பிடம் ஆவணங்களை ஒப்படைக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன.

இந்நிலையில், இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடந்த அன்று அதிமுக அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, ஓபிஎஸ் தரப்பினர் இபிஎஸ் தரப்புனரிடம் ஆவணங்களை இன்று ஒப்படைக்க உள்ளது. அதாவது, அந்த ஆவணங்களை இபிஎஸ் தரப்பினரான அதிமுக எம்பி சிவி சண்முகம்பெற்றுக் கொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்