ஐபிஎல் பிளேஆப்-க்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்று பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சு.!

SRH vs RCB IPL

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs RCB போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. தற்போது வரை குஜராத் அணி மட்டுமே முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்துள்ளது.

மீதமுள்ள 3 அணிகள் யார் என்பதில் 9 அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் போட்டி பிளேஆஃபுக்கு செல்ல முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

பெங்களூரு அணி பிளேஆப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஹைதராபாத் அணி பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறினாலும் இன்று அந்த அணியின் வெற்றிக்காக மற்ற அணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறனர். டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(C), க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத்(W), ஷாபாஸ் அகமது, மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பர்னெல், ஹர்ஷல் படேல், கர்ண் சர்மா, முகமது சிராஜ்

ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(W), ஹாரி புரூக், க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்