பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு…இது தான் கடைசி நாள்.!!

12th exam

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 23ம் தேதி வரை நீட்டிப்பு.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 வரை உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை மே 23ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், துணைத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்