பரபரப்பு…பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..தேடுதல் பணியில் தேசிய காவலர் படையினர்.!!

Mexican bus

வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத  கும்பலால் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். தெற்கு மாநிலமான சியாபாஸில் இருந்து பேருந்தில் அமெரிக்காவை நோக்கி பயணித்தபோது புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்டதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை மீட்க தேசிய காவலர் படையினர் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஓட்டுநர்களுடன்  காணாமல் போன பேருந்து, செவ்வாயன்று எல்லை மாநிலமான நியூவோ லியோனில் வடக்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் எப்போது நடந்தது என்பதைக் குறிப்பிடாமல் , புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேசிய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk