போலீசாரை செருப்பால் அடித்த கிரிக்கெட் வீரர்கள் ..? திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய புது வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் இருவரை அடித்த குற்றச்சாட்டின் பேரில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள் போலீசாரை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் பிரசாந்த் சவுத்ரி மற்றும் அவரது சக கிரிக்கெட் வீரர் வினீத் பன்வாரும் இருவரும் இங்குள்ள பாமாஷா பூங்காவில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் அந்த பூங்காவின் அருகில் தான் தங்கியுள்ளனர்.
அப்போது, ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸ் வாகனத்தை தவறாக நிறுத்துவது தொடர்பாக மூத்த சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) வருண் சர்மா மற்றும் எஸ்ஐ ஜிதேந்திரா ஆகியோருடன் இரு வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு உடல் ரீதியான தாக்குதலாக மாறியது, பின்னர், வீரர்கள் புகாரின் பேரில், போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த வாக்குவாதம் விரைவில் உடல் ரீதியான மோதலாக மாறியது, மேலும் வீரர்கள் புகார் அளித்த பின்னர் இரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், வீரர்களே போலீசாரை செருப்பால் தாக்கும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக, சிவில் லைன்ஸ் பகுதியின் வட்ட அதிகாரி அரவிந்த் சௌராசியா, சம்பவம் குறித்த கூடுதல் அறிக்கையை மூத்த அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். மேலும், இந்த வீடியோ வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
एसएसपी @meerutpolice रोहित सिंह सजवान के मुताबिक प्रकरण की जांच सीओ अरविंद चौरसिया ने की, सीसीटीवी फुटेज खंगाले गए जिसमें खिलाड़ियों द्वारा ही पहले मारपीट की पुष्टि हुई विधिक कार्यवाही की जा रही है https://t.co/w8J85677Sm pic.twitter.com/q2NLKUsnud
— gyanendra shukla (@gyanu999) May 16, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025