வேலூர் அருகே தகராறில் வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!
மாட்டு வியாபாரி ஒருவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
காளிபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தமது நண்பர்களுடன் மது அருந்திய போது, அவரின் மனைவி கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில், அஜித்தை அவரது நண்பர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அஜித்குமார் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய அஜித்தின் நண்பர்களைத் தேடி வருகின்றனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.