தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 அதிகரிப்பு..!

செங்கல்பட்டில் சித்தாமூர் அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இதில், செங்கல்பட்டில் சித்தாமூர் அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்து என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.