உச்சகட்ட பயத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்!சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான சந்திப்பில் வைத்து என்னை கொலை செய்யலாம்!

Default Image

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிங்கப்பூரில் தான் கொலை செய்யப்படலாம் என  அச்சம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில ஆண்டுகளாக ஏவுகணை சோதனை நடத்தி வந்தார். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா சபையில் வடகொரியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தன. தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்றது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வித்திட்ட நிலையில், அணு ஆயுதங்களை அழிக்கும் முயற்சிக்கு கிம் ஜாங் உன் ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசவுள்ளனர். இந்த நிலையில் சிங்கப்பூரில் வைத்து தன்னை கொலை செய்யும் முயற்சி நடக்கலாம் என வட கொரிய அதிபர் திடீர் அச்சம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்