சொன்னபடி செய்து காட்டியுள்ளேன்.! உணர்வுபூர்வமாக நன்றி கூறிய காங். தலைவர் டி.கே.சிவகுமார்.!

சோனியா காந்தி, ராகுல்காந்தியிடம் கூறியது போல வெற்றியை பெற்றுளேன். மக்களுக்கு நன்றி – வெற்றிக்கு பின்னர் டி.கே.சிவகுமார் பேட்டி. 

கர்நாடகா தேர்தல் முடிவுகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டு இருக்கின்றன. இதில், காங்கிரஸ் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. வெற்றிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றிபெற்றதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோகாவை விட 1 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிக்கு பின்னர் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் டிகே.சிவகுமார், கர்நாடகாவில் வெற்றியை கொடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் என உணர்ச்சிபொங்க நன்றி கூறினார். மேலும், நான் கர்நாடகாவில் வெற்றியை பெற்று தருவேன் என ஏற்கனவே சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் கூறினேன். அதன் தற்போது செய்து காட்ட்டியுள்ளேன் எனவும் டி.கே.சிவகுமார் பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.