நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 பேரின் ஜாமீன் ரத்து!

Default Image

நாமக்கல் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி, பிணையில் இருந்த 13 பேரின் ஜாமீனை ரத்து செய்துள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஜோதிமணி என்ற பெண் இறந்து விட, யுவராஜ் திருச்சி சிறையிலும், அவரது ஓட்டுநர் அருண் கோவை சிறையிலும் உள்ளனர். மீதமுள்ள 14 பேருக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வியாழனன்று நடைபெற்ற விசாரணையில், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததாலும், உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகததாலும் இந்த 14 பேரில் 13 பேரின் ஜாமீனை ரத்து செய்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத அமுதரசுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிபதி ஆணையிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்