உயர்நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்புக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை!

Default Image

சென்னை உயர்நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கை இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.

சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 ஆயிரத்து 750 பேர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.

போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும், இதன் மூலம் மருத்துவ அவசர சிகிச்சைகள் அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோன்ற வழக்கில் முந்தைய தடை உத்தரவுகளை சுட்டிக்காட்டி தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் மனுதாரர் முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று  விசாரணைக்காக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்