உயிரிழந்த மகளின் ஜீவனாம்சம், தாயாருக்கு உரிமை உள்ளது; உயர்நீதிமன்றம்.!

chennai high court

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற தாயாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜீவனாம்சம் பெற வேண்டி சரஸ்வதி தொடர்ந்த வழக்கில், ரூ.6.22 லட்சம் வழங்க வேண்டும் என சரஸ்வதியின் கணவர் அண்ணாதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சரஸ்வதி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் ஜெயா மகளின் வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

முன்னதாக 1991ஆம் ஆண்டு அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றனர், இதையடுத்து ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என சரஸ்வதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலுவைத்தொகை ரூ.6,22,500-ஐ வழங்கக்கோரிய வழக்கில். அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வாரிசுரிமை சட்டத்தின் படி,  மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்துகள் குழந்தைகள், பெற்றோருக்கு சேரும் என உத்தரவளித்து, அண்ணாதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்