5 முறை பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் காலமானார்.! 2 நாள் தேசிய துக்கம் அனுசரிப்பு.!

Default Image

5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த 95 வயதான பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார் .

பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கி தெரிவித்து வருகின்றனர். ஒரு தேசிய அரசியல் தலைவரின் இழப்பாக இவரது மறைவு பார்க்கப்படுகிறது. இவரவு மறைவு காரணமாக நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்க படுகிறது என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தனது 20 வயதில் அரசியலில் நுழைந்துள்ளார். சிரோன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 10 முறை சட்டமன்றத்திற்கு எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டு முதன் முதலாக முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளர். அடுத்து, 1977 மற்றும் 1997 என 2வது மற்றும் 3வது முறையாக முதல்வராக இருந்துள்ளார். அடுத்து, 2007 முதல் 2017 வரையில் தொடர்ந்து 2 முறை என் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார் பிரகாஷ் சிங் பாதல் . இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலில் கூட 95 வயதில் தேர்தல் களம் கண்டார் பிரகாஷ் சிங் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்